திருப்பூரில் 22-வது நிட் ஷோ கண்காட்சி துவக்கம்: 400 அரங்குகளுடன் பல்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்பு

திருப்பூரில் 22-வது நிட் ஷோ ஜவுளி தொழில்நுட்ப இயந்திர கண்காட்சி துவங்கியது. 400-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன், பல்வேறு நாடுகளின் ஜவுளி தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள டாப் லைட் மைதானத்தில் 22-வது நிட் ஷோ ஜவுளி தொழில்நுட்ப இயந்திர கண்காட்சி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 400-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.



இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஜவுளி தொழில்நுட்ப இயந்திர தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன டிஜிட்டல் பிரிண்டிங் மெஷின் இக்கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.



ஜப்பானில் தயாரிக்கப்பட்ட பிரிண்டிங் மிஷின் ஒரு மணி நேரத்தில் 350 பனியன்களுக்கு பிரிண்ட் அடிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த இரண்டு இயந்திரங்களும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.



திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பின்னலாடைத் துறைக்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் ஒரே அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறையினரை அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இயந்திரங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன," என்றார்.

மேலும் அவர், "இது போன்ற கண்காட்சிகளை திருப்பூரில் தொடர்ந்து நடத்துவதற்கு தொழில்துறையினருக்கென நிரந்தர அரங்கம் அமைத்து தர அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இரண்டு ஆண்டுகளில் திருப்பூரில் தொழில்துறையினர் சார்பில் இது போன்ற கண்காட்சிகள் நடத்துவதற்கு நிரந்தர அரங்கம் அமைக்கப்படும்," என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருப்பூர், டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பின்னலாடைத் தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...