கோவை வ.உ.சி மைதானத்தில் வாகா எல்லை அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சி: போலீசார் தீவிர பயிற்சி

கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழாவில் வாகா எல்லை அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக ஆயுதப்படை போலீசார் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவையில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் வ.உ.சி மைதானத்தில் முதன் முறையாக வாகா எல்லையில் நடைபெறும் அணிவகுப்பை போன்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



வாகா எல்லையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பு உணர்ச்சி பூர்வமிக்க நிகழ்ச்சியாக இருக்கும். அதே போன்ற அணிவகுப்பை கோவையில் நடத்த ஆயுதப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.



இந்த நிகழ்ச்சிக்கான தீவிர பயிற்சியில் கோவை மாநகர ஆயுதப்படை போலீசார் தற்போது ஆகஸ்ட் 2 முதல் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு வாகா எல்லையில் பயிற்சி பெற்ற கமாண்டோ அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.



பொதுமக்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தால் இந்த சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...