கோவை வ.உ.சி மைதானத்தில் வாகா எல்லை அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சி: போலீசார் தீவிர பயிற்சி

கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழாவில் வாகா எல்லை அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக ஆயுதப்படை போலீசார் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவையில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் வ.உ.சி மைதானத்தில் முதன் முறையாக வாகா எல்லையில் நடைபெறும் அணிவகுப்பை போன்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



வாகா எல்லையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பு உணர்ச்சி பூர்வமிக்க நிகழ்ச்சியாக இருக்கும். அதே போன்ற அணிவகுப்பை கோவையில் நடத்த ஆயுதப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.



இந்த நிகழ்ச்சிக்கான தீவிர பயிற்சியில் கோவை மாநகர ஆயுதப்படை போலீசார் தற்போது ஆகஸ்ட் 2 முதல் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு வாகா எல்லையில் பயிற்சி பெற்ற கமாண்டோ அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.



பொதுமக்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தால் இந்த சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...