வயநாடு மண்சரிவு: உயிரிழந்தவர்களுக்கு வானதி சீனிவாசன் இரங்கல்; நிவாரண உதவிக்கு பாஜக குழு தயார்

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த மண்சரிவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு பாஜக குழு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவின் காரணமாக, 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள செய்தியறிந்து வேதனையடைந்ததாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் மீண்டு வர இறைவனைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வயநாடு மண்சரிவு மீட்புப் பணிகளிலும், மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அமைப்பு குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், அக்குழு தயாராக உள்ளதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை வானதி சீனிவாசன் ஜூலை 30 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...