கோவை காளப்பட்டியில் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ

கோவை காளப்பட்டி நேருநகரில் Dr.A.P.J அப்துல் கலாம் கல்வி மற்றும் மக்கள் நல அறக்கட்டளையின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் குழந்தைகளுக்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: கோவை காளப்பட்டி பகுதி நேருநகரில் Dr.A.P.J அப்துல் கலாம் கல்வி மற்றும் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் 9ஆம் ஆண்டு நினைவு நாள் விழா இன்று (ஜூலை 27) நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் கோவை கவுண்டம்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டார். அவர் சமுதாய கூடத்தில் குழந்தைகளுக்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்தார். மேலும், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகிகள், கழக மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...