கோவை செல்வபுரத்தில் கஞ்சா விற்ற பெண் கைது: 200 கிராம் கஞ்சா பறிமுதல்

கோவை செல்வபுரத்தில் ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது, 49 வயது பெண் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செல்வபுரம் போலீசார் நேற்று (ஜூலை 25) வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லாபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஒரு பெண்ணை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, அந்தப் பெண் முரண்பட்ட பதில்களை அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவரின் மனைவி பர்ஹத் நிஷா (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பர்ஹத் நிஷாவின் மகன் அப்துல் கலாம் (25) மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...