கோவையில் நவம்பரில் நடைபெறவுள்ள உலகின் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக்

கோவையில் நவம்பர் 20 முதல் 30 வரை உலகின் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.


கோவை: ஐ.எச்.ஸ் (Indigenous Horse Society) - தமிழ் நாடு அமைப்பின் சார்பில் கோவையில், வரும் நவம்பர் மாதத்தில் உலகின் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் லோகோ வெளியிட்டு நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (20.07.24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஐ.எச்.ஸ் - தமிழ் நாடு மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.



இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், 'எக்ஸ்போ வெண்' குழுமத்தின் தலைவர் மஹேந்திரன், நடிகர் பிரசாந்த், SNR சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், எமரால்டு குழுமத்தின் இயக்குனர் நிஷ்டா ஸ்ரீ ஸ்ரீனிவாசன், ஐ.எச்.ஸ் அமைப்பின் தென் இந்திய கன்வீனர் நவநீத் ராஜ் மற்றும் பார்க் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி ஆகியோர் கலந்து கொண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த 2 போட்டிகளுக்கான லோகோவை வெளியிட்டனர்.

இந்த போட்டிகள் வரும் நவம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை கோவை மாவட்டம் சர்க்கார்சாமக்குளம் வட்டாரத்தில் உள்ள வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் உள்ள அரங்கில் நடைபெற உள்ளது.

உலகில் முதல் முறையாக IPL/TNPL போல இந்த போலோ பிரிமியர் லீக் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களை முன்னிறுத்தி, Kovai Canter Kings(கோவை), Salem Saddle Soldiers (சேலம்), Madurai Mallet Magicians (மதுரை), Horseplay Soldiers Nellai(நெல்லை), Trichy Turf Torpedoes (திருச்சி), Chennai Champions (சென்னை) என மொத்தம் 6 அணிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.



குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளனர். இது ஒரு தேசிய அளவிலான நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. மேலும், இந்த 2 நிகழ்வுகளும் சர்வதேச தரத்தில் நடைபெறும் என்றும் இந்த போட்டிகளை மதிப்பீடு செய்ய நிபுணத்துவம் மிக்க நடுவர் குழு அமைக்கப்படும் என்றும் இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பெரும் பரிசு தொகை உண்டு என்றும் ஐ.எச்.ஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இந்த போட்டிகளை ரசிகர்கள், பொதுமக்கள் நேரில் காண்பதோடு, பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களிலும், OTT தளங்களிலும், ரேடியோ மூலமாகவும் பார்க்க, கேட்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் ஐ.எச்.ஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...