கோவையில் நவம்பரில் நடைபெறவுள்ள உலகின் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக்

கோவையில் நவம்பர் 20 முதல் 30 வரை உலகின் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.


கோவை: ஐ.எச்.ஸ் (Indigenous Horse Society) - தமிழ் நாடு அமைப்பின் சார்பில் கோவையில், வரும் நவம்பர் மாதத்தில் உலகின் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் லோகோ வெளியிட்டு நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (20.07.24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஐ.எச்.ஸ் - தமிழ் நாடு மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.



இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், 'எக்ஸ்போ வெண்' குழுமத்தின் தலைவர் மஹேந்திரன், நடிகர் பிரசாந்த், SNR சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், எமரால்டு குழுமத்தின் இயக்குனர் நிஷ்டா ஸ்ரீ ஸ்ரீனிவாசன், ஐ.எச்.ஸ் அமைப்பின் தென் இந்திய கன்வீனர் நவநீத் ராஜ் மற்றும் பார்க் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி ஆகியோர் கலந்து கொண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த 2 போட்டிகளுக்கான லோகோவை வெளியிட்டனர்.

இந்த போட்டிகள் வரும் நவம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை கோவை மாவட்டம் சர்க்கார்சாமக்குளம் வட்டாரத்தில் உள்ள வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் உள்ள அரங்கில் நடைபெற உள்ளது.

உலகில் முதல் முறையாக IPL/TNPL போல இந்த போலோ பிரிமியர் லீக் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களை முன்னிறுத்தி, Kovai Canter Kings(கோவை), Salem Saddle Soldiers (சேலம்), Madurai Mallet Magicians (மதுரை), Horseplay Soldiers Nellai(நெல்லை), Trichy Turf Torpedoes (திருச்சி), Chennai Champions (சென்னை) என மொத்தம் 6 அணிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.



குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளனர். இது ஒரு தேசிய அளவிலான நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. மேலும், இந்த 2 நிகழ்வுகளும் சர்வதேச தரத்தில் நடைபெறும் என்றும் இந்த போட்டிகளை மதிப்பீடு செய்ய நிபுணத்துவம் மிக்க நடுவர் குழு அமைக்கப்படும் என்றும் இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பெரும் பரிசு தொகை உண்டு என்றும் ஐ.எச்.ஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இந்த போட்டிகளை ரசிகர்கள், பொதுமக்கள் நேரில் காண்பதோடு, பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களிலும், OTT தளங்களிலும், ரேடியோ மூலமாகவும் பார்க்க, கேட்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் ஐ.எச்.ஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...