கோவை பேருந்தில் மூதாட்டியின் 5 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது

கோவையில் அரசு பேருந்தில் பயணித்த 67 வயது மூதாட்டியின் 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3000 பணம் திருடப்பட்டது. சுந்தராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.


கோவை: கோவை ஈச்சனாரி அருகே உள்ள ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி தனலட்சுமி (67) என்ற மூதாட்டியிடமிருந்து அரசு பேருந்தில் 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3000 பணம் திருடப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை 19) தனது மகள் வீட்டிற்குச் செல்வதற்காக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருந்து அரசு நகர பேருந்தில் ஏறி சுந்தராபுரம் வந்து கொண்டிருந்தார் தனலட்சுமி. மகள் வீட்டை அடைந்த பின்னர், தனது கையப்பையில் வைத்திருந்த பணப்பையைக் காணவில்லை என்பதை உணர்ந்தார். அந்தப் பணப்பையில் 5 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியும், ரூ.3000 பணமும் இருந்தது.

பேருந்தில் பயணம் செய்யும் போது திருட்டு நடந்திருக்கலாம் என்று சந்தேகித்த தனலட்சுமி, இது குறித்து சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் ஞானபிரகாஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...