மின் கட்டண உயர்வு மக்களுக்கு தண்டனை - வானதி சீனிவாசன் கண்டனம்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் மின் கட்டண உயர்வு, தொடர் படுகொலைகள், காவிரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார். திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கடுமையாக விமர்சித்தார்.

வானதி சீனிவாசன் கூறுகையில், "40க்கு 40 எம்பிக்களை அளித்த தமிழக மக்களுக்கு தண்டனையாக தமிழக அரசு மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 5% மின் கட்டண உயர்வு இருக்கப் போகிறது. திமுக அரசு, சொத்து வரி, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, மின்சார கட்டண உயர்வு என மீண்டும் மீண்டும் ஏழை எளிய மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது. மின் கட்டண உயர்வால், உற்பத்தி பொருட்களின் விலையும் உயரப் போகிறது. எனவே பல்வேறு வகையில் மக்களை பாதிக்க போகும் இந்த மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை," என்றார்.

மேலும் அவர், "தமிழகம் தான் இந்தியாவிலேயே அதிகப்படியான கடன் வாங்கி இருக்கும் அரசு. இருப்பினும் இங்குதான் அதிகப்படியான வரி உயர்வும் உள்ளது. இவ்வாறு அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் வகையிலேயே இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மின்சார உயர்வுக்கு உதய் திட்டம் காரணம் என்கிறார்கள். உதய் திட்டம், மக்களுக்கு வழங்கும் மின்சாரத்தை ஒழுங்குபடுத்த சொல்கிறதே தவிர மின் கட்டணத்தை உயர்த்த சொல்லவில்லை. இவர்கள் எது செய்தாலும் அதற்கான பழியை மத்திய அரசின் மீது சுமத்துவது வாடிக்கை," என்று குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் நிகழ்ந்து வரும் தொடர் படுகொலைகள் குறித்தும் வானதி சீனிவாசன் கவலை தெரிவித்தார். "தமிழகத்தில் நிகழ்ந்து வரும் தொடர் படுகொலைகள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதை காட்டுகிறது," என்றார்.

காவிரி விவகாரம் குறித்து பேசிய அவர், "காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கூறும் திமுக அரசு, ஏன் கூட்டணியில் இருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேச முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், "கூட்டணி தர்மம் என்பது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர, மோடியை வீழ்த்துவதற்காக இருக்கக் கூடாது. அதிகமான எம்பிக்களை வைத்திருக்கிறோம், நாங்கள்தான் எதிர்க்கட்சியை வழிநடத்துகிறோம் என்று கூறும் திமுக அரசால், காங்கிரஸ் அரசிடம் பேசி கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற முடியவில்லையே, எப்படி இந்தியாவை ஆட்சி செய்வீர்கள்," என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...