அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் 8 அடி உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, துவானம், காந்தளூர், மறையூர் ஆகிய பகுதிகளில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,003 கனஅடியாக பதிவாகியுள்ளது. தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம் 72.67 அடியாக உள்ளது. நேற்று இந்த அளவு 64 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளதால், அமராவதி அணையின் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமராவதி அணையின் மொத்த நீர்க்கொள்ளளவு 90 அடியாகும். தற்போதைய நீர்மட்டம் 72.67 அடியாக இருப்பதால், அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால், விவசாயிகள் இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். மேலும், அணையின் நீர்மட்டம் உயர்வதால் சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...