அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் 8 அடி உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, துவானம், காந்தளூர், மறையூர் ஆகிய பகுதிகளில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,003 கனஅடியாக பதிவாகியுள்ளது. தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம் 72.67 அடியாக உள்ளது. நேற்று இந்த அளவு 64 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளதால், அமராவதி அணையின் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமராவதி அணையின் மொத்த நீர்க்கொள்ளளவு 90 அடியாகும். தற்போதைய நீர்மட்டம் 72.67 அடியாக இருப்பதால், அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால், விவசாயிகள் இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். மேலும், அணையின் நீர்மட்டம் உயர்வதால் சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...