வால்பாறையில் மண் சரிவு: நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கி தவிப்பு

வால்பாறையில் கனமழை காரணமாக 23வது மற்றும் 24வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையில் மண் சரிந்து மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கித் தவித்தன.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து காணப்படுகின்றன.

இந்நிலையில், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 23வது மற்றும் 24வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையில் சாலையின் மேற்பகுதியில் இருந்து மண் சரிந்து மரம் விழுந்தது. இதனால் சாலையில் மண் குவியல்களாக விழுந்து இருந்தது. காலை 4:30 மணி அளவில் வால்பாறைக்கு வந்த பேருந்து ஓட்டுநர் இதனைப் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.



இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு வரும் வாகனங்களும், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் வாகனங்களும் சாலையில் நீண்ட தூரம் நின்றன. சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வாறு சிக்கித் தவித்தன. காலை 7 மணி அளவில் தீயணைப்பு துறையினரும், நெடுஞ்சாலை துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மரங்களை வெட்டி அகற்றினர். மேலும், ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் கிடந்த கற்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலை சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து வழக்கம் போல் தொடங்கியது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என்பதால், வால்பாறை பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...