கோவை பேருந்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

கோவையில் பேருந்தில் பயணித்த பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் இந்த திருட்டை நடத்தியுள்ளார்.


கோவை: கோவை அடுத்த மதுக்கரை மலைசாமி கோயில் தெருவைச் சேர்ந்த சைலஜா (38) என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி பேருந்தில் திருடப்பட்டுள்ளது.

நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு மின்சார பொருட்கள் கடையில் பணிபுரியும் சைலஜா, ஜூலை 13 அன்று வேலை முடிந்து பேருந்தில் குனியமுத்தூர் செல்லும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர் சைலஜாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சைலஜா, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடப்பட்ட நகையின் மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...