உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார்

உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஓபிஎஸ்-ஐ அவமதித்து பேசியதாக குற்றச்சாட்டு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை 'துரோகி' என்றும் 'பச்சை துரோகி' என்றும் அவரது புகழுக்கும் மரியாதைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தும் வகையில் தினமும் உள்நோக்கத்துடன் ஊடகங்கள் மூலம் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும், இதனால் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு தொண்டர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் மனு வழங்கும்போது தொகுதி செயலாளர் லட்சுமணன், அவைத் தலைவர் ராமச்சந்திரன், தெற்கு ஒன்றியம் அவைத்தலைவர் சிவன், உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் மணி, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, உடுமலை மேற்கு ஒன்றிய வர்த்தக செயலாளர் கண்ணன், உடுமலை வடக்கு ஒன்றிய பேரவை செயலாளர் அரி முருகன், கிளைச் செயலாளர்கள் பழனிச்சாமி, மாசிலாமணி, நாட்ராயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...