உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார்

உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஓபிஎஸ்-ஐ அவமதித்து பேசியதாக குற்றச்சாட்டு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை 'துரோகி' என்றும் 'பச்சை துரோகி' என்றும் அவரது புகழுக்கும் மரியாதைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தும் வகையில் தினமும் உள்நோக்கத்துடன் ஊடகங்கள் மூலம் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும், இதனால் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு தொண்டர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் மனு வழங்கும்போது தொகுதி செயலாளர் லட்சுமணன், அவைத் தலைவர் ராமச்சந்திரன், தெற்கு ஒன்றியம் அவைத்தலைவர் சிவன், உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் மணி, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, உடுமலை மேற்கு ஒன்றிய வர்த்தக செயலாளர் கண்ணன், உடுமலை வடக்கு ஒன்றிய பேரவை செயலாளர் அரி முருகன், கிளைச் செயலாளர்கள் பழனிச்சாமி, மாசிலாமணி, நாட்ராயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...