கோவை புலியகுளத்தில் கொலை சாட்சியை மிரட்டிய நபர் கைது

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், கோர்ட்டில் சாட்சி சொல்லக்கூடாது என்று செலின் என்பவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த சண்முகம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் செலின்(68). இவரது மகன் லியோ மார்ட்டின் கடந்த 2019ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இன்பேன்ட் ராஜ் மற்றும் சண்முகம் (எ) விக்கு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இது தொடர்பான வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று ஜூன்.24 செலின் தனது சகோதரி மகனுடன் பைக்கில் புலியகுளத்தில் உள்ள டிபன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சண்முகம் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் கொலை வழக்கில் கோர்ட்டில் சாட்சி சொல்லக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்தார்.

பின்னர் இது குறித்து செலின் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து அம்மன்குளம் கந்தசாமி லே-அவுட்டை சேர்ந்த கூலி தொழிலாளி சண்முகம் (எ) விக்கு(25) என்பவரை கைது செய்தனர்.

Newsletter

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...