கோவை புலியகுளத்தில் கொலை சாட்சியை மிரட்டிய நபர் கைது

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், கோர்ட்டில் சாட்சி சொல்லக்கூடாது என்று செலின் என்பவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த சண்முகம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் செலின்(68). இவரது மகன் லியோ மார்ட்டின் கடந்த 2019ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இன்பேன்ட் ராஜ் மற்றும் சண்முகம் (எ) விக்கு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இது தொடர்பான வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று ஜூன்.24 செலின் தனது சகோதரி மகனுடன் பைக்கில் புலியகுளத்தில் உள்ள டிபன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சண்முகம் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் கொலை வழக்கில் கோர்ட்டில் சாட்சி சொல்லக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்தார்.

பின்னர் இது குறித்து செலின் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து அம்மன்குளம் கந்தசாமி லே-அவுட்டை சேர்ந்த கூலி தொழிலாளி சண்முகம் (எ) விக்கு(25) என்பவரை கைது செய்தனர்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...