கோவை சாவித்திரி நகரில் நகைக் கடையில் திருட முயன்ற நபர் கைது

சாவித்திரி நகரில் உள்ள தங்க நகைக் கடையில், இரவு நேரத்தில் கதவை உடைத்து நகைகளை திருட முயன்ற விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை செல்வபுரம் பாலாஜி அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன். (52). இவா் சாவித்திரி நகரில் உள்ள தங்க நகைக் கடையில், பட்டறைத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவா் கடந்த திங்கள்கிழமை ஜூன்.17 கடையில் தங்கி இருந்தார். அப்போது இரவு நேரத்தில் நகைக் கடையின் கதவு உடைக்கும் சப்தம் கேட்டு வந்து பார்த்துள்ளார். இதில் கடைக்குள் இருந்து மகேந்திரன் வருவதை அறிந்த அந்த நபா், அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

அப்போது மகேந்திரனின் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அங்கு வருவதற்குள் அந்த நபா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின் இதுகுறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் மகேந்திரன் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது நகைக் கடைக்குள் புகுந்து திருட முயன்ற நபா் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமார் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை நேற்று ஜூன்.19 கைது செய்தனா்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...