கோவை சாவித்திரி நகரில் நகைக் கடையில் திருட முயன்ற நபர் கைது

சாவித்திரி நகரில் உள்ள தங்க நகைக் கடையில், இரவு நேரத்தில் கதவை உடைத்து நகைகளை திருட முயன்ற விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை செல்வபுரம் பாலாஜி அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன். (52). இவா் சாவித்திரி நகரில் உள்ள தங்க நகைக் கடையில், பட்டறைத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவா் கடந்த திங்கள்கிழமை ஜூன்.17 கடையில் தங்கி இருந்தார். அப்போது இரவு நேரத்தில் நகைக் கடையின் கதவு உடைக்கும் சப்தம் கேட்டு வந்து பார்த்துள்ளார். இதில் கடைக்குள் இருந்து மகேந்திரன் வருவதை அறிந்த அந்த நபா், அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

அப்போது மகேந்திரனின் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அங்கு வருவதற்குள் அந்த நபா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின் இதுகுறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் மகேந்திரன் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது நகைக் கடைக்குள் புகுந்து திருட முயன்ற நபா் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமார் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை நேற்று ஜூன்.19 கைது செய்தனா்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...