கோவையில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளில் இந்தியன் வங்கி மற்றும் தென் மத்திய ரயில்வே அணிகள் சாம்பியன்

கோவை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 57-வது நாச்சிமுத்து கவுண்டர் மற்றும் 21-வது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி மற்றும் பெண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.


கோவை: கோவையில் வஉசி உள்விளையாட்டு அரங்கில் 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் மற்றும் 21-வது சிஆர்ஐ பம்ப்ஸ் மகளிர் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கடந்த ஜுன் 5-ம் தேதி துவங்கி நேற்று வரை 5 நாட்களுக்கு நடைபெற்றது.



இதில் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற 8 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் விளையாடிது.



இதில் ஆண்கள் பிரிவில் சென்னை - வருமானவரி அணி, சென்னை- இந்தியன் வங்கி அணி, பெங்களூரு-பாங்க் ஆஃப் பரோடா அணி, லக்னோ-உத்திரபிரதேச போலீஸ் அணி, புது தில்லி-மத்திய செயலக அணி, சென்னை- லயோலா அணி, திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரிய அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணிகள்.



பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் -கேரளா மாநில மின்சார வாரியம் அணி, மும்பை-மத்திய இரயில்வே அணி, மும்பை-மேற்கு இரயில்வே அணி, சென்னை-தென்னக ரயில்வே அணி, சென்னை-ரைசிங் ஸ்டார் அணி, கெல்கத்தா-கிழக்கு இந்திய அணி, செக்கந்திராபாத் - தென் மத்திய இரயில்வே அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் உட்பட 8 அணிகள் பங்கேற்றது.



57-வது நாச்சிமுத்து கவுண்டர் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது, இரண்டாம் இடம் பெற்ற வருமான வரி அணிக்கு பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த பேங்க் ஆஃப் பரோடா அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு ரூ.15 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.



பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற தென் மத்திய இரயில்வே அணி அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற தென்னக இரயில்வே அணிக்கு பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு பரிசாக ரூ.15 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த கிழக்கு இரயில்வே அணிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடிய தென்னக இரயில்வே அணியின் வீராங்கனை ரஷி கோத்தானி என்ற வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...