கோவையில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளில் இந்தியன் வங்கி மற்றும் தென் மத்திய ரயில்வே அணிகள் சாம்பியன்

கோவை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 57-வது நாச்சிமுத்து கவுண்டர் மற்றும் 21-வது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி மற்றும் பெண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.


கோவை: கோவையில் வஉசி உள்விளையாட்டு அரங்கில் 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் மற்றும் 21-வது சிஆர்ஐ பம்ப்ஸ் மகளிர் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கடந்த ஜுன் 5-ம் தேதி துவங்கி நேற்று வரை 5 நாட்களுக்கு நடைபெற்றது.



இதில் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற 8 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் விளையாடிது.



இதில் ஆண்கள் பிரிவில் சென்னை - வருமானவரி அணி, சென்னை- இந்தியன் வங்கி அணி, பெங்களூரு-பாங்க் ஆஃப் பரோடா அணி, லக்னோ-உத்திரபிரதேச போலீஸ் அணி, புது தில்லி-மத்திய செயலக அணி, சென்னை- லயோலா அணி, திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரிய அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணிகள்.



பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் -கேரளா மாநில மின்சார வாரியம் அணி, மும்பை-மத்திய இரயில்வே அணி, மும்பை-மேற்கு இரயில்வே அணி, சென்னை-தென்னக ரயில்வே அணி, சென்னை-ரைசிங் ஸ்டார் அணி, கெல்கத்தா-கிழக்கு இந்திய அணி, செக்கந்திராபாத் - தென் மத்திய இரயில்வே அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் உட்பட 8 அணிகள் பங்கேற்றது.



57-வது நாச்சிமுத்து கவுண்டர் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது, இரண்டாம் இடம் பெற்ற வருமான வரி அணிக்கு பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த பேங்க் ஆஃப் பரோடா அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு ரூ.15 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.



பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற தென் மத்திய இரயில்வே அணி அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற தென்னக இரயில்வே அணிக்கு பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு பரிசாக ரூ.15 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த கிழக்கு இரயில்வே அணிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடிய தென்னக இரயில்வே அணியின் வீராங்கனை ரஷி கோத்தானி என்ற வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...