கோவையில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளில் இந்தியன் வங்கி மற்றும் தென் மத்திய ரயில்வே அணிகள் சாம்பியன்

கோவை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 57-வது நாச்சிமுத்து கவுண்டர் மற்றும் 21-வது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி மற்றும் பெண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.


கோவை: கோவையில் வஉசி உள்விளையாட்டு அரங்கில் 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் மற்றும் 21-வது சிஆர்ஐ பம்ப்ஸ் மகளிர் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கடந்த ஜுன் 5-ம் தேதி துவங்கி நேற்று வரை 5 நாட்களுக்கு நடைபெற்றது.



இதில் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற 8 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் விளையாடிது.



இதில் ஆண்கள் பிரிவில் சென்னை - வருமானவரி அணி, சென்னை- இந்தியன் வங்கி அணி, பெங்களூரு-பாங்க் ஆஃப் பரோடா அணி, லக்னோ-உத்திரபிரதேச போலீஸ் அணி, புது தில்லி-மத்திய செயலக அணி, சென்னை- லயோலா அணி, திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரிய அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணிகள்.



பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் -கேரளா மாநில மின்சார வாரியம் அணி, மும்பை-மத்திய இரயில்வே அணி, மும்பை-மேற்கு இரயில்வே அணி, சென்னை-தென்னக ரயில்வே அணி, சென்னை-ரைசிங் ஸ்டார் அணி, கெல்கத்தா-கிழக்கு இந்திய அணி, செக்கந்திராபாத் - தென் மத்திய இரயில்வே அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் உட்பட 8 அணிகள் பங்கேற்றது.



57-வது நாச்சிமுத்து கவுண்டர் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது, இரண்டாம் இடம் பெற்ற வருமான வரி அணிக்கு பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த பேங்க் ஆஃப் பரோடா அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு ரூ.15 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.



பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற தென் மத்திய இரயில்வே அணி அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற தென்னக இரயில்வே அணிக்கு பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு பரிசாக ரூ.15 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த கிழக்கு இரயில்வே அணிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடிய தென்னக இரயில்வே அணியின் வீராங்கனை ரஷி கோத்தானி என்ற வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...