அகில இந்திய கூடைப்பந்து போட்டி; சென்னை - வருமானவரி அணி, கேரளா மாநில மின்சார வாரிய அணி வெற்றி

முதல் நாள் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை - வருமானவரி அணி, கேரளா மாநில மின்சார வாரிய அணி, பெண்கள் பிரிவில் கேரளா மாநில மின்சார வாரியம், கிழக்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே அணிகள் வெற்றி



Coimbatore: அகில இந்திய கூடைப்பந்து போட்டி கோவையில் நேற்று மாலை 4.00 மணிக்கு துவங்கியது.

இதில் 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் பிரிவில் முதல் நாள் மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை - வருமான வரி அணியை எதிர்த்து கோயம்புத்தூர் - கோவை மாவட்ட கூடைபந்து கழக அணி விளையாடியது, இதில் வருமான வரி அணி 88 - 75 என்ற புள்ளி கணக்கில் வென்றது.



இரவு 7.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து புதுடெல்லி - மத்திய செயலக அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 64 - 55 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

21 வது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான மகளிர் பிரிவு முதல் நாள் மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் திருவனந்தபுரம் - கேரளா மாநிலம் மின்சார வாரிய அணியை எதிர்த்து கோயம்புத்தூர் - கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரளா மாநிலம் மின்சார வாரிய அணி 99 - 42 என்ற புள்ளி கணக்கில் வென்றது.



மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா - கிழக்கு ரயில்வே அணியை எதிர்த்து சென்னை - ரைசிங் ஸ்டார் அணி விளையாடியது. இதில் 81 - 71 என்ற புள்ளி கணக்கில் கிழக்கு ரயில்வே அணி வென்றது.

இரவு 7.00 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது போட்டியில் செகந்திராபாத் - தென் மத்திய ரயில்வே அணியை எதிர்த்து மும்பை - மேற்கு ரயில்வே அணி விளையாடியது. இதில் 80 - 45 என்ற புள்ளி கணக்கில் தென் மத்திய ரயில்வே அணி வென்றது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...