அகில இந்திய கூடைப்பந்து போட்டி; சென்னை - வருமானவரி அணி, கேரளா மாநில மின்சார வாரிய அணி வெற்றி

முதல் நாள் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை - வருமானவரி அணி, கேரளா மாநில மின்சார வாரிய அணி, பெண்கள் பிரிவில் கேரளா மாநில மின்சார வாரியம், கிழக்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே அணிகள் வெற்றி



Coimbatore: அகில இந்திய கூடைப்பந்து போட்டி கோவையில் நேற்று மாலை 4.00 மணிக்கு துவங்கியது.

இதில் 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் பிரிவில் முதல் நாள் மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை - வருமான வரி அணியை எதிர்த்து கோயம்புத்தூர் - கோவை மாவட்ட கூடைபந்து கழக அணி விளையாடியது, இதில் வருமான வரி அணி 88 - 75 என்ற புள்ளி கணக்கில் வென்றது.



இரவு 7.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து புதுடெல்லி - மத்திய செயலக அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 64 - 55 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

21 வது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான மகளிர் பிரிவு முதல் நாள் மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் திருவனந்தபுரம் - கேரளா மாநிலம் மின்சார வாரிய அணியை எதிர்த்து கோயம்புத்தூர் - கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரளா மாநிலம் மின்சார வாரிய அணி 99 - 42 என்ற புள்ளி கணக்கில் வென்றது.



மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா - கிழக்கு ரயில்வே அணியை எதிர்த்து சென்னை - ரைசிங் ஸ்டார் அணி விளையாடியது. இதில் 81 - 71 என்ற புள்ளி கணக்கில் கிழக்கு ரயில்வே அணி வென்றது.

இரவு 7.00 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது போட்டியில் செகந்திராபாத் - தென் மத்திய ரயில்வே அணியை எதிர்த்து மும்பை - மேற்கு ரயில்வே அணி விளையாடியது. இதில் 80 - 45 என்ற புள்ளி கணக்கில் தென் மத்திய ரயில்வே அணி வென்றது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...