அன்னூரில் மழைநீர் செல்லும் பாதை அடைப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

அன்னூர் பேரூராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியில் மழை நீர் செல்லும் பாதையை சில நபர்கள் மண் கொட்டி அடைத்து வைத்திருந்தனர். இதனைக்கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை அன்னூர் பேரூராட்சி 5-வது வார்டு புவனேஸ்வரி நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றாததை கண்டித்தும், மழைநீர் செல்லும் பாதையை தனிநபர் அடைத்திருப்பதை கண்டித்தும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மே.31 சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சத்தி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதனையடுத்து, சத்தி சாலையில் அடைக்கப்பட்ட மழைநீர் செல்லும் பாதை (மே.31) திறக்கப்பட்டது.

அன்னூர் பேரூராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியில் மழை நீர் செல்லும் பாதையை சில நபர்கள் மண் கொட்டி அடைத்து வைத்திருந்தனர்.



இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி நமச்சிவாயம், ஆய்வாளர் நித்யா, மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் நீர்வழிப்பாதை திறக்கப்பட்டதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...