ராணுவ குடியிருப்பில் சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை - கோவை காவல் ஆணையர் உறுதி

ராணுவ குடியிருப்பில் மின்சாரம் பாய்ந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீதும், ஒப்பந்ததாரர் மீதும் புலன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அறிவுரைகளின் படி கங்கா மருத்துவமனை மற்றும் Young Indians உடன் கோவை மாநகர காவல் துறை இணைந்து நடத்தும் காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான மார்பகப் புற்றுநோய், சர்க்கரை நோய் பாத பராமரிப்பு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோவை பி.ஆர்.எஸ் மைதானம் வளாகத்தில் நடைபெற்றது வருகிறது.



கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் சரவணன், ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, கோவை சின்னவேடம்பட்டி ராணுவ குடியிருப்பில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் உயிரிழந்த குறித்து கேள்விக்கு, முதலில் சிஆர்டிசி 174 சந்தேகத்திற்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர் விசாரணையில் 304-A வழக்கு பதிவு செய்து விபத்து என்று வழக்கு மாற்றப்பட்டது. விபத்து ஏற்படுத்தியவர் மீதும் விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் இது குறித்து தற்பொழுது புலன் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி, மின்வாரியத்தில் உரிய அனுமதியில்லாமல் பூங்கா அடியில் மின்சாரம் இணைப்பு கொண்டு வந்துள்ளதாகவும், அது சம்பந்தப்பட்ட நபர் மீதும், ஒப்பந்ததாரர் மீதும் புலன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தற்போது வரை விபத்து சம்பந்தமாக யார் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, புலன் விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். கோவையில் மாநகர் பகுதியில் U-Turn-னால் போக்குவரத்து நெரிசல் சிறிய அளவில் இருந்தாலும் பெரிய அளவில் மக்கள் கருதுகிறார்கள். U-Turnனால் முதலில் இருந்ததை விட தற்பொழுது போக்குவரத்து நேரம் பொதுமக்களுக்கு குறைவாக உள்ளது. ஒரு சில தவறுகளை விரைவில் சரி செய்வதாக கூறினார். கோடை காலத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு உரிய உடை வழங்கப்பட்டதாகவும், முக கவசங்களை ஒரு சில காவலர்கள் சரிவர அணியாமல் இருக்கின்றனர். மேலும் காவலர்களுக்கு உடல் ரீதியாக, மன ரீதியாக அழுத்தங்களை போக்குவதற்காக இதுபோல மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...