கோவையில் மாருதி சுசுகியின் புதிய எபிக் ஸ்விப்ட் கார் அறிமுகம்

கோவை, திருச்சி சாலையில் அம்பாள் ஆட்டோ ஷோரூமில் மாருதி சுசுகியின் நான்காவது தலைமுறை எபிக் ஸ்விப்ட் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.


Coimbatore: கோவையில் மாருதி சுசுகியின் புதிய எபிக் ஸ்விப்ட் கார் மாடலானது திருச்சி சாலையில் உள்ள அம்பாள் ஆட்டோவில் மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழா கோவை அம்பாள் ஆட்டோ ஷோரூமில் ராஜேஷ் ஜெயராமன் மேலாளர் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பிரசன்ன பாலசந்திரன், தினேஷ் மற்றும் சிவா உட்பட பலர் கலந்துகொண்டு நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் புதிய எபிக் ஸ்விப்ட் மாடலின் பல்வேறு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் அறிமுகமாக்கப்பட்டன. காரின் வடிவமைப்பு, வசதிகள் மற்றும் பல்வேறு நுட்பங்கள் பற்றி விரிவாக பேசப்பட்டது.



ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் கூடிய இந்த கார் வெளிப்புற மாற்றங்களில் கோண முகப்பு விளக்குகள், திருத்தப்பட்ட கிரில், புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்குகள் மற்றும் ஒன்பது இன்ச் ஸ்மார்ட் ப்ளே தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

மேலும், புதிய ஸ்விஃப்ட் ஆறு மோனோ-டோன் மற்றும் மூன்று டூயல் டோன்களுடன் கூடிய ஒன்பது வண்ணங்களில் கிடைக்கும்; இது ஸ்போர்ட்டி மற்றும் டைனமிக் டிரைவிங் செயல்திறனை உறுதிப்படுத்துகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...