உடுமலை அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு தீர்த்த ஊற்றும் நிகழ்வும், கோட்டை மாரியம்மனுக்கு குங்கும அர்ச்சனையும் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: சித்திரை மாதம் என்றாலே திருவிழாக்களின் மாதம் என்று சொல்லுமளவுக்கு பல கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். கோடை வெயில் கொளுத்தும் காலத்தில் தெய்வங்களை மட்டுமல்லாமல் மண்ணையும், மனிதர்களையும் குளிர்விக்கும் சக்தி திருவிழாக்களுக்கு உண்டு. அந்தவகையில் உடுமலை அருகே பிரசித்தி பெற்ற கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ளது.



முதல் நிகழ்வாக கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நோன்பு கட்டப்பட்டு அன்றைய தினமே அமராவதி ஆற்றில் திருக்கம்பத்துக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு இரவு 11 மணியளவில் திருக்கம்பம் நடும் விழா நடைபெற்றது. இந்த நிலையில் இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு தீர்த்த ஊற்றும் நிகழ்வும், கோட்டை மாரியம்மனுக்கு குங்கும அர்ச்சனையும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நாளை மே 7-ம் தேதி ஊர் பூவோடு எடுக்கும் நிகழ்வும், வரும் மே 8 ம் தேதி இரவு 9 மணியளவில் மாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளி வீதி வீதியாக பயணம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் ஒருங்கிணைந்து சித்திரைத் திருவிழா கொண்டாடி வரும் நிலையில் ஏராளமான பக்தர்கள் இன்று கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் கோவில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...