கோவை ஆர்.எஸ்.புரத்தில் பைனான்ஸ் தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பைனான்ஸ் தொழிலதிபரிடம் 1200 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற கோவை ரத்தினபுரி அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை துடியலூரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(33). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஏப்ரல்.26 தனது நண்பர் ஒருவரை பார்க்க ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1200ஐ பறித்து தப்பி செல்ல முயன்றார்.

பின் கார்த்திகேயனின் சத்தம் கேட்டு அங்கு சிலர் ஓடி வந்தனர். அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி ‘‘நான் இந்த ஏரியாவில் பெரிய ரவுடி’’ என கூறி அந்த வாலிபர் தப்பி சென்றார். இது குறித்து கார்த்திகேயன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் பணம் பறித்தது கோவை ரத்தினபுரி அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ்(34) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...