பொய் வழக்கு பதிவு செய்து வாலிபரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் போராட்டம்

விசாரணைக்காக அழைத்து சென்ற வாலிபரை கடுமையாக தாக்கி, பொய் வழக்கு பதிவு செய்த கோவை சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர், ஆனந்த் இவரையும் அவரது அண்ணன் அரவிந் என்பவரை கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மார்ச் மாதம் ஜாமீனில் வந்த ஆனந்தை , கொலை முயற்சி வழக்கு தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் கடந்த வாரம் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை தாக்கியதில் கால் உடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆனந்தின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்நிலையில் தன் சகோதரரை தாக்கி பொய் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆனந்தின் தங்கை மற்றும் அவர்களது உறவினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சரவணம்பட்டி காவல்துறையினர் வேண்டும் என்றே தன் சகோதரன் மீது பொய் வழக்கு தொடுத்து சித்தரவதை செய்துள்ளதாகவும், இது குறித்த கேட்ட தன்னையும் தனது தாயாரையும் சாதி பெயரை கூறி தாகாத வார்தையில் திட்டியதாகவும் குற்றம்சாட்டினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்தையில் ஈடுபட்டதை அடுத்து, சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...