தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம்!


கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் தேசிய போலியோ நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று கொடுக்கப்பட்டது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் தொடக்கி வைத்தார். 



இது குறித்து க.விஜயகார்த்திகேயன் கூறுகையில், தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் கோவையில் துவங்கியது. இம்முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.



இதில் 1,60,991 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு குழந்தைகள் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதற்காக 33 மாநகராட்சி, நகர் நல மையங்கள், 129 சத்துணவு கூடங்கள் மற்றும் மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், 45 பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளின் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இம்முகாம் இன்று (ஏப்ரல் 2) மற்றும் இம்மாதம் 30ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என்றார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...