கோவை செல்லும் ரயில்கள் போத்தனூருடன் நிறுத்தம்;  மெமு ரயில் சேவை 2 நாட்கள் நிறுத்தம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக, மதுரை, கண்ணூா், ஷோரனூரில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயில்கள் ஏப்.13 - ஆம் தேதி போத்தனூருடன் நிறுத்தப்படும். அதே போல 13, 14 தேதிகளில் கோவை - மேட்டுப்பாளையம் மெமு இரயில் சேவை நிறுத்தப்படும்  என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


கோவை:சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால், கோவை செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன் படி, கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஏப்.13 - ஆம் தேதியும், காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.14 - ஆம் தேதியும் ரத்து செய்யப்படும். 

மறுமாா்க்கமாக,மேட்டுப்பாளையத்தில் இருந்து பகல் 12.55 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஏப்.13 - ஆம் தேதியும், காலை 10.55 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.14 - ஆம் தேதியும் ரத்து செய்யப்படும்.

கேரள மாநிலம் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில், எா்ணாகுளம் - பெங்களூா் இன்டா்சிட்டி அதிவிரைவு ரயில், பாலக்காடு - ஈரோடு விரைவு ரயில் ஏப்.13 - ஆம் தேதி கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.

கோவை - மதுரை, கோவை - கண்ணூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் ஏப்.13 - ஆம் தேதி போத்தனூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக, இந்த ரயில்கள் போத்தனூரில் இருந்து புறப்பட்டு மதுரை, கண்ணூா் சென்றடையும்.

இதுபோல், ஷோரனூா் - கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஏப்.13, 14 ஆகிய தேதிகளில் கோவை செல்வதற்கு பதிலாக போத்தனூருடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...