கோவை செல்லும் ரயில்கள் போத்தனூருடன் நிறுத்தம்;  மெமு ரயில் சேவை 2 நாட்கள் நிறுத்தம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக, மதுரை, கண்ணூா், ஷோரனூரில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயில்கள் ஏப்.13 - ஆம் தேதி போத்தனூருடன் நிறுத்தப்படும். அதே போல 13, 14 தேதிகளில் கோவை - மேட்டுப்பாளையம் மெமு இரயில் சேவை நிறுத்தப்படும்  என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


கோவை:சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால், கோவை செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன் படி, கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஏப்.13 - ஆம் தேதியும், காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.14 - ஆம் தேதியும் ரத்து செய்யப்படும். 

மறுமாா்க்கமாக,மேட்டுப்பாளையத்தில் இருந்து பகல் 12.55 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஏப்.13 - ஆம் தேதியும், காலை 10.55 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.14 - ஆம் தேதியும் ரத்து செய்யப்படும்.

கேரள மாநிலம் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில், எா்ணாகுளம் - பெங்களூா் இன்டா்சிட்டி அதிவிரைவு ரயில், பாலக்காடு - ஈரோடு விரைவு ரயில் ஏப்.13 - ஆம் தேதி கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.

கோவை - மதுரை, கோவை - கண்ணூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் ஏப்.13 - ஆம் தேதி போத்தனூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக, இந்த ரயில்கள் போத்தனூரில் இருந்து புறப்பட்டு மதுரை, கண்ணூா் சென்றடையும்.

இதுபோல், ஷோரனூா் - கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஏப்.13, 14 ஆகிய தேதிகளில் கோவை செல்வதற்கு பதிலாக போத்தனூருடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...