சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடன் இணைந்து ஆனைமலை பகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் வாக்கு சேகரிப்பு

அதிமுக ஆட்சியில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டம் ஆகியவற்றை நிறுத்தி வைத்து திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது என்று அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடன் இன்று வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம், ஆலங்கடவு, பூச்நாரி, ஆத்து பொள்ளாச்சி ஆகிய கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அதிமுக வேட்பாளர் சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் கார்த்திகேயன், அதிமுக ஆட்சியில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை நிறுத்தி வைத்து திமுக அரசு மக்களை வஞ்சித்து வருவதாகவும், மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் சரியான வேலையும், கூலியும் தராமல் கூலித் தொழிலாளர்களை திமுக அரசு வஞ்சித்து வருவதாகவும் எனவே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை புறக்கணித்து பாடம் புகுத்த வேண்டும் என்றும் கூறி வாக்கு சேகரித்தார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...