சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடன் இணைந்து ஆனைமலை பகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் வாக்கு சேகரிப்பு

அதிமுக ஆட்சியில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டம் ஆகியவற்றை நிறுத்தி வைத்து திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது என்று அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடன் இன்று வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம், ஆலங்கடவு, பூச்நாரி, ஆத்து பொள்ளாச்சி ஆகிய கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அதிமுக வேட்பாளர் சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் கார்த்திகேயன், அதிமுக ஆட்சியில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை நிறுத்தி வைத்து திமுக அரசு மக்களை வஞ்சித்து வருவதாகவும், மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் சரியான வேலையும், கூலியும் தராமல் கூலித் தொழிலாளர்களை திமுக அரசு வஞ்சித்து வருவதாகவும் எனவே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை புறக்கணித்து பாடம் புகுத்த வேண்டும் என்றும் கூறி வாக்கு சேகரித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...