உடுமலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

காந்தி சதுக்கம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய அணிவகுப்புக்கு உடுமலை டி.எஸ் பி.சுகுமாறன் தலைமை வகித்தார். அணிவகுப்பின்போது, நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், அச்சப்பட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் உடுமலையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. காந்தி சதுக்கம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய அணிவகுப்புக்கு உடுமலை டி.எஸ் பி.சுகுமாறன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் ஜீவானந்தம், பாலமுருகன்,கீதா, நிர்மலாதேவி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னசி மேரி, போக்குவரத்து உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



காவல்துறையினர் அணிவகுப்பு பள்ளிவாசல் வீதி, சதாசிவம் வீதி வழியாக பொள்ளாச்சி- பழனி சாலையை அடைந்து, பின்னர் பழைய பஸ் நிலையம் வழியாக சென்று மத்திய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. குஜராத் மாநிலம் சூரத்தில் பகுதியை சேர்ந்த காவல் ஆய்வாளர் எ.ஜே. வஷவா தலைமையில் வருகை தந்த துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுத படையினர் உடுமலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல்துறையினர் 160க்கும் மேற்பட்டோர் அணி வகுப்பில் ஈடுபட்டனர்.



ஊர்வலம் முன்பு உடுமலை காவல்துறையினர் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அச்சப்பட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...