கோ பேக் மோடி, கெட் அவுட் மோடி- கோவையில் திமுகவினர் நூதன பிரச்சாரம்

ரேஸ்கோர்ஸ் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் திமுகவினர் "கோ பேக் மோடி - கெட் அவுட் மோடி" என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன், நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.



கோவை: நாடாளுமன்ற தேர்தல் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், அனைத்து தரப்பினரையும் சந்தித்து உதய சூரியனுக்கு வாக்களிக்க கோரி திமுகவினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் திமுகவினர் "கோ பேக் மோடி - கெட் அவுட் மோடி" என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன், நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

அப்போது, எதற்காக கெட் அவுட் மோடி என கூறுகிறோம் என விளக்கினர். கடந்த ஆண்டுகளில் மோடி தலைமையிலான பாஜக அரசு மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை என்பதையும், எதற்காக உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.



பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் நடைபெற்ற நூதன பிரச்சாரத்தில், விவசாய அணி அமைப்பாளர் அக்ரி பாலு, அயலக அணி தலைவர் ராஜ்குமார், விவசாயபொறியாளர் அணி தலைவர் கண்ணதாசன், வைரமணி, ஆண்டனி, ஞானவேல், பாலசந்தர், செந்தில்குமார், கிருபாகரன், சுப்பிரமணியன், ரங்கநாதன், அமீன், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...