குனியமுத்தூரில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை

யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பியோடிய ஆட்டோ டிரைவரை குனியமுத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் கோவையில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நேற்று (மார்ச்.18) இளம்பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண் தனியாக இருந்ததை அறிந்து வீட்டுக்குள் நுழைந்தார். அவர் திடீரென இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சல் போட்டார். இதனால் பயந்து போன அந்த வாலிபர் அவரை மிரட்டி சென்றார். இது குறித்து இளம்பெண் தனது கணவருக்கு போனில் தகவல் கொடுத்தார்.

வீட்டுக்கு வந்த அவரது கணவர் அந்த வாலிபரை கண்டித்தார். அக்கம்பக்கத்தினர் சிலர் அங்கு கூடினர். இதனையடுத்து அந்த வாலிபர் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியும், கற்களை வீசி எறிந்தும் அங்கிருந்து தப்பி சென்றார்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்தி(27) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...