குனியமுத்தூரில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை

யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பியோடிய ஆட்டோ டிரைவரை குனியமுத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் கோவையில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நேற்று (மார்ச்.18) இளம்பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண் தனியாக இருந்ததை அறிந்து வீட்டுக்குள் நுழைந்தார். அவர் திடீரென இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சல் போட்டார். இதனால் பயந்து போன அந்த வாலிபர் அவரை மிரட்டி சென்றார். இது குறித்து இளம்பெண் தனது கணவருக்கு போனில் தகவல் கொடுத்தார்.

வீட்டுக்கு வந்த அவரது கணவர் அந்த வாலிபரை கண்டித்தார். அக்கம்பக்கத்தினர் சிலர் அங்கு கூடினர். இதனையடுத்து அந்த வாலிபர் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியும், கற்களை வீசி எறிந்தும் அங்கிருந்து தப்பி சென்றார்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்தி(27) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...