தாராபுரம் அருகே மூலனூர் பகுதியில் ஆட்டுச் சந்தை துவக்க விழா - ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை

மூலனூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் ஆட்டுச்சந்தை துவங்கப்பட்டுள்ளது. ஆட்டுச் சந்தை துவக்க விழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சியில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஆட்டுச் சந்தை துவக்க விழா நடைபெற்றது. இந்தச் சந்தைக்கு மூலனூர் பேரூராட்சி செயலாளர் தண்டபாணி முன்னிலையில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் தலைவருமான இல.பத்மநாபன் தலைமையில் ஆட்டுச் சந்தை துவக்க விழா நடைபெற்றது.

மூலனூரில் நடைபெறும் ஆட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை காலை 5-மணிக்கு நடைபெறும். மூலனூர் பேரூராட்சி சந்தை பகுதியில் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகள் சந்தை கடந்த 10-வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. மூலனூர் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் வாரச்சந்தைக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் இன்று ஆட்டுச் சந்தை திறப்பு விழா நடைபெற்றது.



மூலனூர் வாரச்சந்தைக்கு மூலனூர், அண்ணா நகர், பெரமியம், கிலாங்குண்டல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிட்ட காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மூலனூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் ஆட்டுச்சந்தை துவங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இன்று துவக்க விழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...