தாராபுரம் அருகே மூலனூர் பகுதியில் ஆட்டுச் சந்தை துவக்க விழா - ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை

மூலனூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் ஆட்டுச்சந்தை துவங்கப்பட்டுள்ளது. ஆட்டுச் சந்தை துவக்க விழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சியில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஆட்டுச் சந்தை துவக்க விழா நடைபெற்றது. இந்தச் சந்தைக்கு மூலனூர் பேரூராட்சி செயலாளர் தண்டபாணி முன்னிலையில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் தலைவருமான இல.பத்மநாபன் தலைமையில் ஆட்டுச் சந்தை துவக்க விழா நடைபெற்றது.

மூலனூரில் நடைபெறும் ஆட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை காலை 5-மணிக்கு நடைபெறும். மூலனூர் பேரூராட்சி சந்தை பகுதியில் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகள் சந்தை கடந்த 10-வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. மூலனூர் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் வாரச்சந்தைக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் இன்று ஆட்டுச் சந்தை திறப்பு விழா நடைபெற்றது.



மூலனூர் வாரச்சந்தைக்கு மூலனூர், அண்ணா நகர், பெரமியம், கிலாங்குண்டல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிட்ட காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மூலனூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் ஆட்டுச்சந்தை துவங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இன்று துவக்க விழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...