கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினாசி சாலை ஆகிய பகுதிகளில் குழாய் பதிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் சாலை சீரமைப்பு பணிகள் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் 24x7 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் முடிவடைந்த பகுதிகளில் விரைவில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24x7 குடிநீர் திட்டப்பணிகளின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளான திருச்சி சாலையில் போத்தீஸ் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரையிலும், மேட்டுப்பாளையம் சாலையில் அவினாசிலிங்கம் கல்லூரி முதல் ITI வரையிலும், சத்தியமங்கலம் சாலையில் உக்கடம் பேருந்து நிலையம் முதல் இராமகிருஷ்ணாபுரம் வரையிலும் குடிநீர் குழாய் பதித்தல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மேலும், மாநில நெடுஞ்சாலையான அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதل் சித்ரா வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் குழாய் பதிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்காக வெட்டப்படும் தார் சாலை பகுதிகள் விரைவில் சீரமைக்கப்பட உள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளில் மாநகராட்சியின் மூலம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களாலும், அவினாசி சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலமும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் காரணமாக பாதிக்கப்பட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்படுவதால், பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24x7 குடிநீர் திட்டப்பணிகளின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளான திருச்சி சாலையில் போத்தீஸ் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரையிலும், மேட்டுப்பாளையம் சாலையில் அவினாசிலிங்கம் கல்லூரி முதல் ITI வரையிலும், சத்தியமங்கலம் சாலையில் உக்கடம் பேருந்து நிலையம் முதல் இராமகிருஷ்ணாபுரம் வரையிலும் குடிநீர் குழாய் பதித்தல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மேலும், மாநில நெடுஞ்சாலையான அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதل் சித்ரா வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் குழாய் பதிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்காக வெட்டப்படும் தார் சாலை பகுதிகள் விரைவில் சீரமைக்கப்பட உள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளில் மாநகராட்சியின் மூலம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களாலும், அவினாசி சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலமும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் காரணமாக பாதிக்கப்பட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்படுவதால், பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.