கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பாலம், செயற்கை புல் மைதானம், ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மழைநீர் வடிகால் பணிகளும் பார்வையிடப்பட்டன.
Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

வார்டு எண் 29-க்கு உட்பட்ட மகாத்மா காந்தி நகர் - மருதம் நகர் பகுதியில் இணைப்பு பாலம் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கணபதி பிட்டி காலனி பகுதியில் செயற்கை புல் தரை மைதானம் அமைக்கும் பணிகள் பரிசீலிக்கப்பட்டன. கணபதி கார்டன் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற நலவாழ்வு சுகாதார மையம் வளாகத்தில் ஆய்வகம் அமைக்கும் திட்டமும் ஆய்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மத்திய மண்டலம் வார்டு எண் 63-க்கு உட்பட்ட திருச்சி பிரதான சாலையில் உள்ள நகர்ப்புற சுகாதார மையம் அருகில் மாநகராட்சி இடத்தில் மரக்கன்று நடவு செய்தார். மேலும், 80 அடி சாலையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தினையும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

முன்னதாக, ஆணையாளர் வடக்கு மண்டலம் வார்டு எண் 14-க்கு உட்பட்ட துடியலூர் மீனாட்சி கார்டன் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது உதவி ஆணையர்கள் கணேசன், மோகனசுந்தரி, செயற்பொறியாளர்கள் தேவதாஸ், ஜெகன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார்(பொ), சத்தியமூர்த்தி(பொ), மாமன்ற உறுப்பினர் சித்ரா, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், முருகன், உதவி பொறியாளர்கள் பிரகதீஸ்வரன், சக்திவேல், கோபிநாத், சுகாதார ஆய்வாளர்கள் ஜீவமுருகராஜ், ஜெயபார்வதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
வார்டு எண் 29-க்கு உட்பட்ட மகாத்மா காந்தி நகர் - மருதம் நகர் பகுதியில் இணைப்பு பாலம் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கணபதி பிட்டி காலனி பகுதியில் செயற்கை புல் தரை மைதானம் அமைக்கும் பணிகள் பரிசீலிக்கப்பட்டன. கணபதி கார்டன் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற நலவாழ்வு சுகாதார மையம் வளாகத்தில் ஆய்வகம் அமைக்கும் திட்டமும் ஆய்வு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மத்திய மண்டலம் வார்டு எண் 63-க்கு உட்பட்ட திருச்சி பிரதான சாலையில் உள்ள நகர்ப்புற சுகாதார மையம் அருகில் மாநகராட்சி இடத்தில் மரக்கன்று நடவு செய்தார். மேலும், 80 அடி சாலையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தினையும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
முன்னதாக, ஆணையாளர் வடக்கு மண்டலம் வார்டு எண் 14-க்கு உட்பட்ட துடியலூர் மீனாட்சி கார்டன் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது உதவி ஆணையர்கள் கணேசன், மோகனசுந்தரி, செயற்பொறியாளர்கள் தேவதாஸ், ஜெகன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார்(பொ), சத்தியமூர்த்தி(பொ), மாமன்ற உறுப்பினர் சித்ரா, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், முருகன், உதவி பொறியாளர்கள் பிரகதீஸ்வரன், சக்திவேல், கோபிநாத், சுகாதார ஆய்வாளர்கள் ஜீவமுருகராஜ், ஜெயபார்வதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.