கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன. நான்கு பிரிவுகளில் 121 அணிகள் பங்கேற்றன. வெற்றியாளர்களுக்கு ரூபாய் 75,000 மதிப்பிலான பணப்பரிசு வழங்கப்பட்டது.
Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் பிரிவு மாணவர்களின் சிந்தனைத்திறன், ஆய்வுநோக்கு மற்றும் புதுமையைக் கண்டடைகின்ற ஆர்வத்தை ஊக்குவிக்கின்ற நோக்கில், 'இன்னோவிஷன்-2026' அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன.
விழாவுக்கு, கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr. இராச. வசந்தகுமார் தலைமை வகித்தார். அவர் தனது உரையில், "மாணவர்கள் ஏட்டுக் கல்வியுடன், திறன் மேம்பாட்டிலும் ஆர்வம் கொள்ளவேண்டும். திறன்மேம்பாடும், பரந்த ஆய்வு மனப்பாங்கும், சமுதாயப் பொறுப்புணர்வும், நாட்டின் அடிப்படைத் தேவைகள் முதலிய நிலையான இலக்குகளை அடைவதற்கு உதவ வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இன்னோவிஷன் நிகழ்வின் நிறைவுச் சுற்றில், பிச்சதான் பிரிவில் 11 அணிகளும், ஐடியாத்தான் பிரிவில் 22 அணிகளும், ஹேக்கதான் பிரிவில் 45 அணிகளும், இன்னோவேத்தான் பிரிவில் 43 அணிகளும் என மொத்தம் 121 அணிகள் பங்கேற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூபாய் 75,000 மதிப்பிலான பணப்பரிசு வழங்கப்பட்டது.
இன்னோவிஷன் - 2026 நிகழ்வானது முதன்மையர் வீ. இராகவி தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்வு மாணவர்களின் புதுமையான சிந்தனைகளையும், தொழில்நுட்ப திறன்களையும் வெளிப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்தது.
விழாவுக்கு, கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr. இராச. வசந்தகுமார் தலைமை வகித்தார். அவர் தனது உரையில், "மாணவர்கள் ஏட்டுக் கல்வியுடன், திறன் மேம்பாட்டிலும் ஆர்வம் கொள்ளவேண்டும். திறன்மேம்பாடும், பரந்த ஆய்வு மனப்பாங்கும், சமுதாயப் பொறுப்புணர்வும், நாட்டின் அடிப்படைத் தேவைகள் முதலிய நிலையான இலக்குகளை அடைவதற்கு உதவ வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இன்னோவிஷன் நிகழ்வின் நிறைவுச் சுற்றில், பிச்சதான் பிரிவில் 11 அணிகளும், ஐடியாத்தான் பிரிவில் 22 அணிகளும், ஹேக்கதான் பிரிவில் 45 அணிகளும், இன்னோவேத்தான் பிரிவில் 43 அணிகளும் என மொத்தம் 121 அணிகள் பங்கேற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூபாய் 75,000 மதிப்பிலான பணப்பரிசு வழங்கப்பட்டது.
இன்னோவிஷன் - 2026 நிகழ்வானது முதன்மையர் வீ. இராகவி தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்வு மாணவர்களின் புதுமையான சிந்தனைகளையும், தொழில்நுட்ப திறன்களையும் வெளிப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்தது.