கோவையில் ரூ.40 ஆயிரத்திற்கு பதில் தவறுதலாக ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை அனுப்பிய நபர்- தலைமறைவான வட மாநில தொழிலாளர்கள்

கட்டுமான நிறுவனர் பாஸ்கரன் கடந்த மாதம் சம்பளம் போடும்பொழுது 40 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக தவறுதலாக 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை தொழிலாளி சிவம் நாயக் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இந்த பணத்துடன் தலைமறைவாகியுள்ள வடமாநில தொழிலாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கணபதி பகுதியில் கட்டுமான அலுவலகம் வைத்திருப்பவர் பாஸ்கரன். இவரது நிறுவனத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிவம் நாயக், பிரபாகரன் நாயக் ஆகிய இருவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பாஸ்கரன் கடந்த மாதம் சம்பளம் போடும்பொழுது 40 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக தவறுதலாக 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை சிவம் நாயக் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தவறுதலாக பணம் அனுப்பியதை உணர்ந்த பாஸ்கரன் உடனடியாக சிவம் நாயக்கை அழைத்து அந்த பணத்தை திங்கட்கிழமை வந்து வாங்கிக் கொள்கிறேன் என கூறி இருக்கிறார்.



இந்நிலையில் இன்று காலை அவர் சைட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது சைட்டில் அவர்களை காணவில்லை. பின்னர் இது குறித்து விசாரிக்கும் பொழுது நேற்று இரவே அவர்கள் அவர்களது ஊருக்கு புறப்பட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பாஸ்கரன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.



புகாரைத் தொடர்ந்து வங்கி கணக்கு முடக்கப்பட்டு ஆய்வு செய்ததில் ஏற்கனவே ஒரு லட்சத்தை அவர்கள் எடுத்து கொண்டு விட்டது தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து பாஸ்கரன் கூறுகையில், இத்தனை நாட்களாக வேலை செய்துவிட்டு துரோகம் இளைத்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், தன்னால் அந்த நம்பிக்கை துரோகத்தை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...