கோவை உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் நாய் தொல்லை - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஒண்டிப்புதூா், சீரநாயக்கன்பாளையம் பகுதிகளில் இயங்கி வரும் நாய்கள் கருத்தடை மையங்களுடன், கூடுதலாக கருத்தடை மையங்களை ஏற்படுத்தி மாநகரில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகரப் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூா், ராமநாதபுரம், புலியகுளம், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றி வருகின்றன.

மாநகரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றும் தெருநாய்களால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இரவுப் பணி முடித்து இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் கூட்டம் துரத்துவதால், விபத்துகள் ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யும் பணியில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநகரில் நாய்கள் தொல்லை மேலும் அதிகரித்து வருகிறது.

எனவே ஒண்டிப்புதூா், சீரநாயக்கன்பாளையம் பகுதிகளில் இயங்கி வரும் நாய்கள் கருத்தடை மையங்களுடன், கூடுதலாக கருத்தடை மையங்களை ஏற்படுத்தி மாநகரில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் இன்று (பிப்.19) கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...