கோவை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வரத்து குறைவு – ஒரு கிலோ ரூ.1200 விற்பனை

மல்லிகை பூ ஒரு கிலோ 1,200 ரூபாய்க்கும், ஜாதி மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை கிலோ 600 ரூபாய்க்குக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் மல்லி விலை குறைய வாய்ப்புள்ளது என்று மலர் வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை பூ மார்க்கெட்டுக்கு ஊட்டி, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் உதிரிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

பனிக்காலத்தில் மல்லி, ஜாதிமல்லி மற்றும் முல்லை பூக்கள் மலர்ச்சி குறைந்து விலை அதிகரிப்பு வழக்கம். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக விலை அதிகரித்து மல்லி கிலோ 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இப்போது பனி குறைந்து வெயில் அதிகரித்துள்ளது.

ஆனாலும், இரவு நேரங்களில் பனிப்பொழிவு குறையவில்லை. அதனால் மல்லிகை உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது. நேற்று மல்லிகை ஒரு கிலோ 1200 ரூபாய்க்கும், ஜாதி மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்க்கு, முல்லை கிலோ 600, ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மலர் வியபாரிகள் கூறுகையில், மல்லி, ஜாதி, முல்லை இந்த மூன்றும் வெயில் காலத்தில் தான் அதிகம் வளர்ச்சி இருக்கும் பனிக்காலத்தில் மலர்ச்சி அதிகம் இருக்காது வழக்கமாக ஜனவரி பிப்ரவரியில் பணி குறைந்து உற்பத்தி அதிகரிக்கும்.

ஆனால், இந்த முறை பணி குறையவில்லை. இரவு நேரத்தில் பணி அதிகமாக உள்ளது. அதனால் மல்லி வரத்து குறைந்து குறைந்தது விலை அதிகரித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் மல்லி விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...