கோவை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வரத்து குறைவு – ஒரு கிலோ ரூ.1200 விற்பனை

மல்லிகை பூ ஒரு கிலோ 1,200 ரூபாய்க்கும், ஜாதி மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை கிலோ 600 ரூபாய்க்குக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் மல்லி விலை குறைய வாய்ப்புள்ளது என்று மலர் வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை பூ மார்க்கெட்டுக்கு ஊட்டி, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் உதிரிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

பனிக்காலத்தில் மல்லி, ஜாதிமல்லி மற்றும் முல்லை பூக்கள் மலர்ச்சி குறைந்து விலை அதிகரிப்பு வழக்கம். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக விலை அதிகரித்து மல்லி கிலோ 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இப்போது பனி குறைந்து வெயில் அதிகரித்துள்ளது.

ஆனாலும், இரவு நேரங்களில் பனிப்பொழிவு குறையவில்லை. அதனால் மல்லிகை உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது. நேற்று மல்லிகை ஒரு கிலோ 1200 ரூபாய்க்கும், ஜாதி மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்க்கு, முல்லை கிலோ 600, ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மலர் வியபாரிகள் கூறுகையில், மல்லி, ஜாதி, முல்லை இந்த மூன்றும் வெயில் காலத்தில் தான் அதிகம் வளர்ச்சி இருக்கும் பனிக்காலத்தில் மலர்ச்சி அதிகம் இருக்காது வழக்கமாக ஜனவரி பிப்ரவரியில் பணி குறைந்து உற்பத்தி அதிகரிக்கும்.

ஆனால், இந்த முறை பணி குறையவில்லை. இரவு நேரத்தில் பணி அதிகமாக உள்ளது. அதனால் மல்லி வரத்து குறைந்து குறைந்தது விலை அதிகரித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் மல்லி விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...