குறுஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உடுமலை பெதப்பம்பட்டி சாலையில் மக்கள் மறியல்

பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி கிராமத்தை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தரப்பில் தீர்மானம் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்பட்டது.

அதற்கு அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் உடுமலை-பெதப்பம்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட்டால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சித் துறை அதிகாரிகள், போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அத்துடன் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேலும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் உடுமலை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சாலை மறியல் போராட்டத்தால் உடுமலை பெதப்பம்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...