குறுஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உடுமலை பெதப்பம்பட்டி சாலையில் மக்கள் மறியல்

பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி கிராமத்தை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தரப்பில் தீர்மானம் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்பட்டது.

அதற்கு அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் உடுமலை-பெதப்பம்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட்டால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சித் துறை அதிகாரிகள், போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அத்துடன் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேலும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் உடுமலை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சாலை மறியல் போராட்டத்தால் உடுமலை பெதப்பம்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...