தி.மு.க ஆட்சியில் பத்திரிகையாளர் உயிருக்கே அச்சுறுத்தல் - பா.ஜ.க தேசிய மகளிர் தலைவி வானதி சீனிவாசன் கண்டனம்

சமூக விரோதிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. பத்திரிகையாளர் ஒருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் தான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளது என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த, 'நியூஸ் 7 தமிழ்' செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு என்பவர் நேற்று இரவு (ஜனவரி 24) அவரது வீட்டுக்கு அருகிலேயே சமூக விரோத கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பல்லடம் பகுதியில் நடக்கும் சமூக விரோதச் செயல்களை தனது செய்திகள் மூலம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததால் நேசபிரபு தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக விரோதிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. பத்திரிகையாளர் ஒருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் தான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளது. திமுக அரசை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால் நள்ளிரவில் பெரும் படையுடன் வீட்டு சுவர் ஏறி கைது செய்கிறது காவல் துறை.

ஆனால், கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள், கனிமவள கொள்ளை என கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை காவல் துறை கண்டுகொள்வதில்லை. இதற்கு திமுகவினரால் காவல் துறையினர் கைகள் கட்டப்பட்டிருப்பதே காரணம். எனவே, நேசபிரபுவை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். நேசபிரபுவுக்கு தமிழ்நாடு அரசு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...