கோவை மாவட்டத்தில் நெரிசல் மிகுந்த சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் - ஆட்சியரிடம் எம்.பி., பி.ஆர்‌.நடராஜன் கோரிக்கை

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டி உள்ளபடி இழப்பீடு விரைவாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேட்டுக் கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்தார்.



கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டி உள்ளபடி இழப்பீடு விரைவாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள S வளைவு பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்திட ரவுண்டானா அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், தண்ணீர் பந்தல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.



மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தரைப்பாலம் விரிவுபடுத்துவது குறித்தும், சாய்பாபா காலனி பகுதியில் அமைய உள்ள மேம்பாலம் குறித்தும், மாவட்ட ஆட்சியருடன் நாடாளுமன்ற உறுப்பினர் விவாதித்தார். சமீபத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுடன் சாய்பாபா காலனி மேம்பாலம் அமைய உள்ள பகுதியை நேரடியாக ஆய்வு செய்து இருந்தார்.



அது குறித்தும், அப்பகுதியில் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதத்தில் மேம்பாலம் அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சந்திப்பின் போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், கே.எஸ்.கனகராஜ், 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூபதி, மாவட்ட குழு உறுப்பினர் ஜாகீர், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் அளித்த விவசாயிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...