வடுகபாளையத்தில் மது போதையில் அதிவேகமாக காரை இயக்கிய நபரின் செல்போனை பறித்ததால் சாலையில் படுத்து அட்டகாசம்

மதுபோதையில் அதிவேகமாக காரை இயக்கிய காரணத்தால், செல்போனை பறித்துக் கொண்டு போலீசார் தராததால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் படுத்துக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையத்தில் அதிவேகமாக மது போதையில் காரை இயக்கி சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றதாக கூறி பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அதிவேகமாக காரை இயக்கிய நபரின் செல்போனை பிடுங்கி வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் மது போதையில் காரில் வந்த நபர் அந்த இருசக்கர வாகன ஓட்டியிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.



இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



மேலும் செல்போனை பறித்துக் கொண்டு தராததால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் படுத்துக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளார். மேலும் அங்கு வந்த போதை ஆசாமியின் நண்பர்கள் அந்த இருசக்கர வாகன ஓட்டியை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடிக்கவும் முயன்றுள்ளனர்.



இதனையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே போதை ஆசாமி சாலையில் படுத்து அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...