கோவை டவுன் ஹாலில் உள்ள கோனியம்மன் கோவிலை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சுத்தம் செய்தார்

இந்து மதங்களின் அடையாளத்தை சீர் அழிப்பது. கேவலம் படுத்துவது தான் திமுகவினர் வேலை. ஜல்லிக்கட்டு என்பது இந்து மதத்தின் சனாதனம் ஒன்றாகும். கோயிலில் சாமி கும்பிட்ட பிறகுதான் காளைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


கோவை: அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆணைக்கிணங்க அருள்மிகு ஸ்ரீ கோனியம்மன் திருக்கோயிலை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்,



15-ம் முதல் 21-ம் தேதி நாடு முழுவதும் கோவிலை தூய்மை செய்ய வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தெரிவித்தனர். இந்த கோவில் நல்ல முறை பராமரிப்பில் இருந்தால் கூடாது. ஒருசில இடங்களில் கூரை மேல் குப்பை உள்ளது. அதனை சுத்தம் செய்தோம். ஒவ்வொரு வீட்டில் 5 விளக்குகள் ஏற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி கேட்டுள்ளார்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பில் வெற்றி பெற்றுள்ளோம். கோவில் கட்டபட்ட இடத்தில் தான் கோவிலை இடித்து மசூதி கட்டினர். அதன் பிறகு தான் மசூதி கட்டப்பட்டது என்றும், மேலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியுள்ளது. திமுக ஆட்சி வந்த பிறகு சமய அடையாளம் இல்லாமல் திருவள்ளுவர் சிலையை கொண்டு வந்தனர். திருக்குறளில் லட்சுமி, விஷ்ணு போன்ற கடவுள் பற்றி தாம் திருக்குறளிள் உள்ளது. அதை திமுக படித்துள்ளாதா என்று தெரியவில்லை.

தமிழகத்தில் ஜல்லிகட்டு, மஞ்சு விரட்டு சாமி வழிபாடு தான் செய்கிறார்கள். இந்து மதங்களின் அடையாளத்தை சீர் அழிப்பது. கேவலம் படுத்துவது திமுகவினர் வேலை என்று விமர்சனம் செய்தார். ஜல்லிக்கட்டு என்பது இந்து மதத்தின் சனாதனம் ஒன்றாகும். கோயிலில் சாமி கும்பிட்ட பிறகுதான் காளைகளை அவிழ்த்து விடுகிறார்கள். ஆளுநர் தமிழக அரசிடம் கணக்கு கேட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்துகிறார் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...