தாராபுரம் அருகே தொடர் கோழி திருட்டில் ஈடுபட்டு வந்த கூலித் தொழிலாளி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே படுகை பகுதியில் சேவல் திருட்டில் ஈடுபட்டு வந்த கூலி தொழிலாளியை தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: தொடர்ந்து சேவல் திருடு போவதாக சிவக்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில் சேவலை திருடிய கருப்பணன் மகன் முருகனை, தாராபுரம் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி தாராபுரம் கிளை சிறையில் அடைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தாளக்கரை அருகே உள்ள படுகை பகுதியில் அடிக்கடி சேவல்கள் களவு போவது தெரியவந்தது. இது குறித்து பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று படுகைக்கை பகுதியில் சிவகுமார் என்பவர் தோட்டத்தில் இரண்டு சேவல்கள் திருட்டுப் போனதையடுத்து, இது குறித்து சிவகுமார் என்பவர் தாராபுரம் குற்றப்பிரிவு போலீஸ் சாரிடம் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் தாராபுரம் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் போலீசார் அப்பகுதியில் சேவல் திருட்டில் ஈடுபடும் நபர்களை குறித்து அப்பகுதியில் விசாரனை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் தாராபுரத்தை அடுத்த தாளக்கரை பகுதியை சேர்ந்த கருப்பணன் மகன் முருகன்( 55) கூலித் தொழிலாளி என தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் ஆய்வாளர் கருப்பணன் மகன் முருகன் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...