தாராபுரம் அருகே தொடர் கோழி திருட்டில் ஈடுபட்டு வந்த கூலித் தொழிலாளி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே படுகை பகுதியில் சேவல் திருட்டில் ஈடுபட்டு வந்த கூலி தொழிலாளியை தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: தொடர்ந்து சேவல் திருடு போவதாக சிவக்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில் சேவலை திருடிய கருப்பணன் மகன் முருகனை, தாராபுரம் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி தாராபுரம் கிளை சிறையில் அடைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தாளக்கரை அருகே உள்ள படுகை பகுதியில் அடிக்கடி சேவல்கள் களவு போவது தெரியவந்தது. இது குறித்து பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று படுகைக்கை பகுதியில் சிவகுமார் என்பவர் தோட்டத்தில் இரண்டு சேவல்கள் திருட்டுப் போனதையடுத்து, இது குறித்து சிவகுமார் என்பவர் தாராபுரம் குற்றப்பிரிவு போலீஸ் சாரிடம் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் தாராபுரம் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் போலீசார் அப்பகுதியில் சேவல் திருட்டில் ஈடுபடும் நபர்களை குறித்து அப்பகுதியில் விசாரனை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் தாராபுரத்தை அடுத்த தாளக்கரை பகுதியை சேர்ந்த கருப்பணன் மகன் முருகன்( 55) கூலித் தொழிலாளி என தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் ஆய்வாளர் கருப்பணன் மகன் முருகன் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...