திருப்பூர் மாநகராட்சி தினசரி பூ மார்கெட்டில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

ஆயுத பூஜையை முன்னிட்டு, திருப்பூர் மாநகராட்சி தினசரி பூ மார்கெட்டில். பூஜைக்கு தேவையான பூக்கள் மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் தினசரி மார்க்எட்டில் மல்லி கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரையிலும், முல்லை கிலோ 600 ரூபாய்க்கும், செவ்வந்தி கிலோ 250 லிருந்து 300 ரூபாய் வரையிலும், சம்பங்கி கிலோ 250 ரூபாய்க்கும், செவ்வரளி கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஆயுதபூஜை பண்டிகையானது, நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருப்பூர் தொழில் நகரம் என்பதால் ஆயுதபூஜை பண்டிகையானது விமரிசையாக கொண்டாடப்படும்.



இந்நிலையில் ஆயுத பூஜைக்கு முக்கிய தேவையான பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க திருப்பூர் மாநகராட்சி தினசரி பூ மார்கெட்டில் பொதுமக்கள் கூட்டமானது அதிகரித்து காணப்பட்டது.



ஆயுத பூஜையால் மல்லி கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரையிலும், முல்லை கிலோ 600 ரூபாய்க்கும், செவ்வந்தி கிலோ 250 லிருந்து 300 ரூபாய் வரையிலும், சம்பங்கி கிலோ 250 ரூபாய்க்கும், செவ்வரளி கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனையானது.



மேலும் பூஜைக்கு தேவையான வாழைக்கன்று, பொரி, பழங்கள் உள்ளிட்ட பிற பொருட்களின் விலையும் சற்று அதிகரித்தே காணப்பட்டது. விலை அதிகம் என்றாலும் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். பூ மார்கெட்டில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...