ஆனைமலை திவான்சாபுதூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் ஒத்திவைப்பு

கோவை மாவட்டம் ஆனைமலை திவான்சாபுதூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: திவான்சாபுதூர் கிராமம், VPP திருமண மண்டபத்தில் (சக்தி சோயாஸ் நிறுவனம் அருகில்), நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி வழங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை திவான்சாபுதூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆனைமலை வட்டம், திவான்சாபுதூர் கிராமம், VPP திருமண மண்டபத்தில் (சக்தி சோயாஸ் நிறுவனம் அருகில்), 18.10.2023 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் வருகின்ற 31.10.2023 (செவ்வாய்கிழமை) காலை 11.00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் கொடுக்கலாம். மனுக்கனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 31.10.2023 அன்று திவான்சாபுதூர் கிராமம், VPP திருமண மண்டபத்தில் (சக்தி சோயாஸ் நிறுவனம் அருகில்), நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி வழங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...