திருப்பூரில் திமுக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா - அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி பங்கேற்பு

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. தொழிலாளர் அணி சார்பில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பங்கேற்று வழங்கினர்.


திருப்பூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தமிழ் நாட்டில் மக்களுக்கு என்னற்ற திட்டங்களை வழங்கியுள்ளார். இதனை மனதில் கொண்டு மக்கள் தி.மு.க.வுக்கு நன்றி கடன் பட்டவராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணியின் சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் உள்பட 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தாராபுரம் சிவரஞ்சனி மஹாலில் நடைபெற்றது. விழாவுக்கு தொழிலாளர் அணயின் மாநில செயலாளர் பி.டி.சி.செல்வராஜ் வரவேற்றார். விழாவிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் எஸ்.முருகானந்தம், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் உள்பட 200 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.



பிறகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது “தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தமிழ் நாட்டில் மக்களுக்கு என்னற்ற திட்டங்களை வழங்கியுள்ளார். இதனை மனதில் கொண்டு மக்கள் தி.மு.க.வுக்கு நன்றி கடன் பட்டவராக இருக்க வேண்டும்” என்றார்.

விழாவில் நகர அவைத்தலைவர் கதிரவன், நகர துணை செயலாளரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வி.கமலக்கண்ணன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பவர் சேகர், நகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...